Tuesday, 8 November 2016

திருக்குறள் : பதினெண் கீழ்க்கணக்கு

திருக்குறள் : பதினெண் கீழ்க்கணக்கு: நாலடியார்   பதினெண் கீழ்க்கணக்கு   நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு   தமிழ் நீதி நூல் . இது நான்கு அடிகளைக் கொண்ட   வெண்பாக்களால்   ஆனத...

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு.

பதினெண் கீழ்க்கணக்கு

சிறுபஞ்சமூலம்


பதினெண் கீழ்க்கணக்குநூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர்.