Wednesday, 10 January 2018

தமிழகத்தைத் தாக்கிய புயல்கள்


        தமிழகத்தை இதுவரை தாக்கிய 29 புயல்கள்



சென்னை: வங்கக் கடலில் உருவான 29 புயல்களில் தானே, நிஷா, வர்தா புயல்கள் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியவை.  இதுவரை தமிழகத்தில் 29 புயல்கள் தாக்கியுள்ளன. அதில் கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி வங்கக் கடலில் தோன்றிய புயல் 100 கிமீ வேகத்தில் சென்னை அருகே கரையைக் கடந்தது. அதில் பெருத்த சேதம் ஏற்பட்டது. ராயபுரம் பனைமரத் தொட்டி குப்பத்தில் கடல் நீர் உள்ளே புகுந்தது. கூவம்  ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சென்ைன துறைமுகத்துக்கு வந்த 4 கப்பல்கள் புயலில் சிக்கி தரைதட்டி நின்றன. 2 கப்பல்கள் பாறைமீது மோதி நொறுங்கின. சென்னை துறைமுகத்தில் நின்றிருந்த லைபீரியாவை சேர்ந்த கப்பல் ஒன்று புயல் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அங்கும் இங்கும் தத்தளித்து ஒரு பாறைமீது மோதி  இரண்டாக பிளந்து கடலில் மூழ்கியது. அந்த கப்பலின் கொடி மரம் மட்டும் கடல் மட்டத்துக்கு வெளியில் தெரிந்தது.

அந்த கப்பலில் பணியாற்றிய 47 பேரில் கேப்டன் உள்பட 14 பேர் கப்பல் உடைந்ததால் கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர். 8 பேர் கப்பலின் கொடி மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தனர். மறுநாள் காலையில் அவர்கள் மீட்கப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்த பயணிகள் ரயில் மதுராந்தகம் அருகே கவிந்தது. அதில் பலபேர் காயம் அடைந்தனர். 1977ம் ஆண்டு ஒரு பெரும் புயல் தமிழகத்தை தாக்கியது. திருச்சி தஞ்சையில் மட்டும் அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தில் நின்றிருந்த சீன கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது. அந்த கப்பலின் கேப்டன் இறந்தார். 1985ம் ஆண்டில் ஒரு புயல் தமிழகத்தை தாக்கியது. பின்னர் 1990 முதல் 2006ம் ஆண்டு வரை உருவான புயல்களில் 1998ல் உருவான புயல் அதிக அளவில் மழையை கொட்டித் தீர்த்து. அந்த ஆண்டு கணக்குப்படி சராசரியை விட 30 சதவீதம்  கூடுதலாக மழை பெய்தது.

அதற்கு பிறகு, 2005ம் ஆண்டு பியார், பாஸ், பனூஸ் என மூன்று புயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. இதன் காரணமாக 2005ம் ஆண்டு மொத்தமாக 773 மிமீ மழை பெய்தது. சராசரியாக 432 மிமீ என கணக்கிடப்பட்டது. இது 79 சதவீதம் இயல்பைவிட கூடுதல். அதனால் 2005ம் ஆண்டு பெருஞ்சேதம் ஏற்பட்டது. தமிழகமே வெள்ளக்காடானது. பல கோடி மதிப்பு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. 2008ம் ஆண்டு வந்த நிஷா புயல் வங்கக் கடலில் உருவானது. 22 ஆண்டுகளுக்கு பிறகு வங்கக் கடலில் உருவான பெரும் புயல் என்று இதை வர்ணித்தார்கள். நவம்பர் மாதம் தோன்றிய இந்த புயல் சுமார் 20 நாட்கள் தமிழகத்தில் மழையை கொட்டித்  தீர்த்து காரைக்காலில் கரை கடந்தது. இதனால் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 177 பேர் இறந்தனர். 2782 கால்நடைகள் இறந்தன. 61 ஆயிரம் குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. 1.5 லட்சம் குடிசைகள் வீடுகள் சேதம் அடைந்தன. சுமார் 8.80 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 14 லட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

20 லட்சம் ஏக்கர் பயிர் சேதம் அடைந்ததாக அரசு அறிவித்தது. 2011ம் ஆண்டு தானே புயல் வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை தாக்கியது. அந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி உருவான இந்த புயல்தான் முதலாவது அதிதீவிரப் புயல் என்ற பட்டியலில் இடம் பிடித்தது. இது  டிசம்பர் 30ம் தேதிதான் புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது. மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசி கடலோரப் பகுதிகளை சி்ன்னாபின்னமாக்கியது. அப்போது சென்னையில் 2, புதுச்சேரியில் 7, கடலூரில் 39 பேர் உயிரிழந்தனர்.1000க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்தன.40 ஆயிரம் மின் கம்பங்கள் முறிந்து விழந்தன. தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம் தான்.2015ம் ஆண்டு பருவமழையின் போது செபலா, மெஹ் என்று இரண்டு புயல்கள் அரபிக் கடல் பகுதியில் தோன்றினாலும் வங்கக் கடலில் பெரிய அளவில் புயல் ஏதும் உருவாகவில்லை.

ஆனால், எல்நினோ என்ற புவியியல் மாற்றம் காரணமாக  வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி அதன் காரணமாக உருவான காற்றழுத்தம் ஆகியவை வங்கக் கடலில் உருவாகி நவம்பர் முதல் வாரத்தில் கனமழையை கொட்டித் தீர்த்தது. அதனால் கடலோர மாவட்டங்கள் எல்லாம் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. அதிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. 2015 டிசம்பர் முதல் வாரத்திலும் மீண்டும் கனமழை கொட்டத் தொடங்கியது. ஏற்கெனவே பெய்த மழையால் வெள்ளம் சூழ்ந்த நிலையில், மீண்டும் மழை பெய்தது பெரும் சோதனையாக அமைந்தது. மக்கள் வெளியில் வர அச்சப்பட்டு வீட்டுக்குள் முடங்கினர். டிசம்பர் 2ம் தேதி இரவு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வெள்ள நீருடன் அந்த நீரும் சேர்ந்து சென்னையை மூழ்கடித்தத

ஒக்கி புயல்


 

ஒக்கி புயல் 


புதுதில்லி: கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள புயலுக்கு ‘ஒக்கி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்காளதேசம் வழங்கியுள்ளது. வங்காள மொழியில் ‘ஒக்கி’ என்றால் கண் என்று அர்த்தமாம்.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை தீவிரமாகி கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதியில் ஒக்கி புயலாக மையம் கொண்டிருந்ததை அடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளத்தின் ஒரு பகுதியிலும் பலத்த சூறாவளியுடன் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் 4 பேரும், கேரளத்தில் 4 பேரும் ஆக மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அடுத்த புயலுக்கான பெயரை இந்தியா வழங்கியுள்ளது. உலக வானிலை ஆய்வு அமைப்பும் மேலும் 2 அமைப்புகளும் இணைந்து 2000-ஆம் ஆண்டில் புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறையை கொண்டுவந்தன. இதன்மூலம் உலகளவில் வானிலை முன்னறிவிப்பாளர்கள், பொதுமக்கள், வானிலை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தொடர்புகொள்ள வசதியாகவும், எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடுவதற்கு உதவியாகவும் இந்த முறை கொண்டுவரப்பட்டது. உலகளவில் 9 கடல் மண்டலங்களில் உள்ள நாடுகள் இந்த பெயர்களை வழங்குகின்றன.

இப்போது கன்னியாகுமரி அருகே உருவாகி தாக்கியுள்ள புயலுக்கு ‘ஒக்கி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது வங்கதேசம் தந்த பெயராகும். வங்காள மொழியில் 'ஒக்கி' என்றால் கண் என்று அர்த்தமாம்.

அடுத்த புயலுக்கு ‘சாகர்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இந்தியா தந்த பெயராகும். ஹிந்தி வார்த்தையான 'சாகர்' என்றால் கடல் என்று அர்த்தம் என தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒக்கி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று லட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்து இருப்பதாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தால் உருவான இந்தப் புயல் லட்சத்தீவில் மையம் கொண்ட பின் கடலிலே வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் கடல் சூழல் சாதகமாக இருந்தால், வட கிழக்காக கோவா, மும்பை கடற்கரை நோக்கி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும் என்று அமெரிக்காவின் சர்வதேச புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் ஒக்கி புயலால் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் திருவனந்தபுரம், ஆலப்புழை, கோட்டயம், பத்தனந்திட்டா, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புயல் பெயர் காரணம்

 


வர்தா புயல் என்று பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா?



  • தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள வர்தா புயல் இந்தியாவில் தென் ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் நாளை மதியம் கரையை கடக்க உள்ளது.



  • வர்தா புயலானது தற்போது சென்னையில் இருந்து 260 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • சென்னையை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த புயலுக்கு வர்தா என்ற பெயரினை பாகிஸ்தான் வைத்துள்ளது, வர்தா என்றால் சிகப்பு ரோஜா என்று அர்த்தம்.

  • இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் பெயரினை தீர்மானம் செய்கின்றன.



  • கடைசியாக சென்னையை தாக்கிய நாடா புயலுக்கு ஓமன் நாடு தான் பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது, நாடா என்றால் ஒன்றும் இல்லை என்பது பொருள்.

சிவன் பிள்ளை



 விண்வெளித்துறை செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமனம்

பதிவு: ஜனவரி 10, 2018 19:48
     









மத்திய விண்வெளித்துறை செயலாளர் மற்றும் விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக கிரண் குமார் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ள சிவன் பிள்ளை நியமனத்திற்கு கேபினட் நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சிவன் பிள்ளை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல், இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுகலை பொறியியல் முடித்துள்ளார். மேலும், மும்பை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 1982-ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த சிவன் பல்வேறு திட்டங்களில் திறம்பட பணியாற்றியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக சிவன் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றார். இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவன், விண்வெளித்துறை செயலாளர் பதவியையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடக இலக்கியம்


                              நாடக இலக்கியம்

நாடு + அகம் = நாடகம்; உள்ளம் விரும்புமாறு ஆடலும் பாடலும் கொண்டு விளங்குவது நாடகம் ஆகும். ‘இல்லது, இனியது, நல்லது என்று புலவரால் நாட்டப்படுவது நாடகம்’ என்பார் தொல்காப்பிய உரையாசிரியர். கூத்தரும் விறலியரும் நாடகக் கலைஞர்கள் ஆவர்.

1.2.1 காலந்தோறும் நாடகம்


தொல்காப்பியத்தில் நாடக வழக்கு என்னும் சொல்லாட்சி காணப் பெறுகின்றது. பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற நாடக இலக்கண நூல்கள் பண்டைக் காலத்தில் இருந்தமையைச் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையின்வழி அறியலாம். கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகளை நன்றாகக் காணமுடிகின்றது.

கலைகள் காமத்தை மிகுவிப்பன என்ற எண்ணமுடைய சமணர்களால் களப்பிரர் காலத்தில் நாடகம் தன் செல்வாக்கை இழந்தது. இராஜராஜசோழன் காலத்தில் ராஜராஜேஸ்வர விஜயம் என்னும் நாடகம் இயற்றப்பட்டு நடிக்கப் பெற்றது. பிறகு கி.பி.17ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து மீண்டும் நாடகங்கள் புத்துயிர் பெறத் தொடங்கின. பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் முதலியன எளிய நடையில் அமைந்து மக்களை மிகவும் கவர்ந்தன.

கி.பி.18ஆம் நூற்றாண்டளவில், இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நாடகங்கள் மிகப் புகழ் பெற்றன.

கி.பி.19ஆம் நூற்றாண்டு தொடங்கி, நாடகம் மிகுந்த வளர்ச்சிபெறத் தொடங்கியது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆங்கில மொழியின் இரகசிய வழி (The secret way) என்னும் நூலைத் தழுவி, மனோன்மணீயம் என்னும் நாடகத்தை யாத்தளித்தார். இதனைப் போன்று அடுத்தடுத்துக் கவிதை நாடகங்கள் பல தமிழில் எழுந்தன. பிறகு, உரைநடை உரையாடல்கள் கொண்ட நாடகங்கள் பலவும் தோன்றலாயின. பிற்காலத்திய திரைப்படத் தோற்றத்திற்கு நாடகமே முன்னோடி என்பது யாவரும் அறிந்த ஒன்றேயாகும். இன்றும், தொலைக்காட்சிகளில் நாடகத்தின் செல்வாக்குச் சிறந்து விளங்கி வருவது கண்கூடு.

காசி விசுவநாத முதலியார், திண்டிவனம் ராமசாமி ராஜா, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் ராஜமாணிக்கம், எம்.ஆர்.ராதா, ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

1.2.2 நாடக அமைப்பு


நாடகத்தில் உரையாடல் முதலிடம் பெறும். பங்கு பெறுவோர் கதாபாத்திரங்கள் எனப் பெறுவர். நிகழ்ச்சி நடைபெறும் இடம், காலம், சூழல் ஆகியனவும் குறிக்கப் பெற வேண்டும். பேசுவோருக்கேற்ற உணர்ச்சிக் குறிப்புகள் (மெய்ப்பாடு) வசனத்தில் ஆங்காங்கே அடைப்புக் குறிக்குள் சுட்டப் பெறுவதும் உண்டு.

நாடகம், பொதுவாக, தொடக்கம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு என்று ஐந்து கூறுகளையுடையதாக இருக்கும். இக்கூறுகளாகிய பெரும்பிரிவுகள் அங்கங்கள் என்னும் பெயரில் விளங்கும். இவற்றில் களன் அல்லது காட்சி என்னும் சிறு பிரிவுகள் அமையும்.

இன்பியலாகவோ, துன்பியலாகவோ நாடகங்கள் முடிவு பெறும். துன்பியல் முடிவுகளே பெரும்பாலும் வரவேற்புப் பெறும். நாடகம் இத்தனை பக்கங்கள் அல்லது இவ்வளவு கால நேரம் கொண்டதாக விளங்க வேண்டும் என்றெல்லாம் எந்த வரையறையும் இல்லை. படிக்கத்தக்கன, நடிக்கத்தக்கன, படிக்கவும் நடிக்கவும் தக்கன எனப் பல வகைகளில் நாடகம் புனையப் பெறும். நாடகம் நடிக்கப் பெறுங்காலத்து நடிப்பவரின் மெய்ப்பாடு, குரல் அழுத்த வேறுபாடு முதலியன வசனத்திற்கு மேலும் மெருகூட்டிக் காண்போரை விரைந்து சென்றடைகின்றன எனலாம். மேடை நாடகம், வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம், படிப்பறை நாடகம் எனப் பலவாகக் கலைஞரின் நிலைக்கேற்ப நாடகங்கள் புத்தம் புதியனவாகப் படைத்தளிக்கப் பெற்று வருகின்றன.

பாவைக்கூத்து

 

        பாவைக்கூத்து   




                                                              ஊடகத்தை ஓடவிடு
                                                             பாவைக்கூத்து, கொல்லம்

 
             உயிரற்ற பாவைகளை, உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி நிகழ்த்தப்படும் கூத்து பாவைக்கூத்து என்றழைக்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி மூலம் திரைச்சீலையில் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி நிகழ்த்துவது தோல்பாவை கூத்து.இக்கலை, தோல்பாவைக் கூத்து, தோல்பாவை நிழல் கூத்து, நிழலாட்டம், தோல் பொம்மலாட்டம் என வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.[1] இக்கலையானது இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், கேரளம், ஒரிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில் மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிகழ்கிறது. இக்கலையானது இன்றைய நிலையில் நலிந்து கொண்டே வருகின்ற கலையாக மாறிவருகிறது.மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ‘கணிகர்’ சாதியின் உட்பிரிவான ‘மண்டிகர்’ சாதியைச் சார்ந்தவர்கள், இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

நாடகச் சிறப்பு


               அரங்கேற்று காதை


****************************************



1.மாதவி நாட்டியம் பயின்றால்

(மாதவியின் பிறப்பு,சிறப்பு,நடன பயிற்சி பற்றி விவரித்தல்.)






தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பு-அருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5

பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி-தன்னை-
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்,
ஏழாண்டு இயற்றி,ஓர் ஈராறு ஆண்டில் 10
சூழ்கடன் மன்னற்குக் காட்டல் வேண்டி,

தெய்வ மலையான பொதிகை மலையில் இருந்த அகத்திய முனிவர் சாபமேற்று,விண்ணுலகை விடுத்து மண்ணுலகில் பிறந்தனர்,இந்திரன் மகன் சயந்தனும்,ஊர்வசியும்.மாதவியாக மண்ணுலகில் பிறந்த ஊர்வசி,தன் நடனத் திறமையை அரங்கேற்றி,’தலைக்கோல்’ பட்டம் பெற்றால்.வேணுவாக பிறந்த சயந்தனும் அவளுக்கு துணை நின்றான்.அந்த நடன அரங்கிலே அகத்தியர்,அவர்களுக்குச் சாபம் நீங்க செய்தார்.

நாடகத் தொழிலில் மாறுபாடுகள் இல்லாத சிறப்பினை உடையவர்,மாதவியாக பிறந்த ஊர்வசி போன்ற வானமகளிராகிய நடன மாதர்.அவர்ப் போல குன்றாத தொழில் சிறப்போடு் பிறந்தவள் இந்த ‘மாதவி’!

சித்திராபதியின் மகளாக பிறந்த இவள்,அழகிய பெரிய தோள்களை உடையவள்;அந்த மாதவியான ஊர்வசின் மரபினிலே வந்து பிறந்தவள்;தாது அவிழ்கின்ற மலர்கள் சூடிய,சுருள் கூந்தல் உடையவள்.

‘கூத்து’,'பாட்டு’,'ஒப்பனை’ என்று நாடக மகளிர்க்கு உரிமையாக சொல்லப்படும் மூன்றினுள் ஒன்றினும் குறைவில்லாமல் ஏழாண்டுக்காலம் மாதவி இவற்றில் முறையாக பயிற்சி பெற்றால்.தாம் பயின்ற நடன கலையை அரங்கேற்ற நினைத்து,தம் பன்னிரண்டாவது வயதில்,வீரர் படை சூழ்ந்த,கழலணிந்த சோழமன்னன் அவைக்கு செல்ல விரும்பினால்.