Tuesday, 9 January 2018

சிலப்பதிகாரம்


                                  சிலப்பதிகாரம்








            சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு  காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

பிள்ளைத்தமிழ்









 காப்புப் பருவம்

பாட்டுடைத் தலைவனை    அல்லது தலைவியைக் காத்தருளுமாறு இறைவனை    வேண்டிப்பாடுவது. இது குழந்தையின் மூன்றாம் மாதத்திற்குரியது.

தாலப் பருவம்

 தால் - நாக்கு, குழந்தையின் ஐந்தாம் மாதத்திற்குரியது. குழந்தையை நாவசைத்து ஒலி எழுப்புமாறு வேண்டுதல்.

 செங்கீரைப் பருவம்

ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி இரு கைகளையும் ஊன்றிக் கீரை அசைவது போலக் குழந்தையை, செங்கீரை ஆடுமாறு வேண்டுவது. இது   குழந்தையின் 7ஆம் மாத்திற்குரியது.

சப்பாணி

குழந்தையின் 9ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை இரு கைகளையும் கொட்டுமாறு வேண்டுதல்.

முத்தம்

இப்பருவம் 11ஆம் மாதத்திற்குரியது. குழந்தையை முத்தம் கொடுக்கும்படியாகத் தாயும் பிறரும் வேண்டுவது.

வருகை அல்லது வாரானை

குழந்தையின் 13ஆம் மாதத்தில் குழந்தையைத் தளர்நடையிட்டு வருக என அழைப்பது.

அம்புலி

15ஆம் மாதத்திற்குரிய இப்பருவத்தில்    நிலவைப் பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது. இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும் நான்கு வழிகளில் அமைத்துப் பாடுவர். இப்பருவம் பாடுவதற்குக் கடினமான பருவம் என்பர்.

சிற்றில்

17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)

சிறுபறை

19ஆம் மாதத்திற்குரிய இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி விளையாடுதலைக் குறிக்கும்.

சிறுதேர்

21ஆம் மாதத்திற்குரிய இதில் குழந்தை சிறுதேர் உருட்டி விளையாடுதல் குறிப்பிடப்படும்.

நீராடல்

குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டுதல்.

அம்மானை - கழங்கு

கழங்கினை மேலை வீசி ஆடும்படி வேண்டுதல்.

ஊசல்

ஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.

நற்றிணை




  •                       நற்றிணை

இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. நற்றிணையை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன் பாண்டியன் மாறன் வழுதி.
தொண்டி என்பது சேர நாட்டு துறைமுகம். மாந்தை என்பது சேர நாட்டு கடற்கரை ஊர் என்பது போன்ற செய்திகள் நற்றிணையிலிருந்து அறியப்படுகின்றன.

பத்துப்பாட்டு நூல்கள்


பத்துப்பாட்டு நூல்கள் - Names of Pathupattu Noolgal
பத்துப்பாட்டு நூல்கள்
1. திருமுருகு ஆற்றுப்படை
2. பொருநர் ஆற்றுப்படை
3. சிறுபாண் ஆற்றுப்படை
4. பெரும்பாண் ஆற்றுப்படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப் பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்

பத்துப்பாட்டு நூல்கள்


பத்துப்பாட்டு நூல்கள் - Names of Pathupattu Noolgal
பத்துப்பாட்டு நூல்கள்
1. திருமுருகு ஆற்றுப்படை
2. பொருநர் ஆற்றுப்படை
3. சிறுபாண் ஆற்றுப்படை
4. பெரும்பாண் ஆற்றுப்படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப் பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்

திரு.வி.க. நூல்கள்







திரு.வி.க. நூல்கள்








தமிழ் விடுதூது

திருச்சிற்றம்பலம்

மதுரைச் சொக்கநாதர்

தமிழ் விடுதூது


(கலிவெண்பா)

1.சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண்
 
2.டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே
 
3.செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற்
 
4.கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா
 
5.மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே
 
6.மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால்
 
7.தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி
 
8.மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே
 
9.ஒல்காப் பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த தொன்மொழியும் - மல்காச்சொற்