உ
|
திருச்சிற்றம்பலம்
|
மதுரைச் சொக்கநாதர் |
தமிழ் விடுதூது |
(கலிவெண்பா)
|
1. | சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந் தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் |
2. | டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே |
3. | செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் |
4. | கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர் பாடலறி வித்த படைவேளும் - வீடகலா |
5. | மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும் அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே |
6. | மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின் ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால் |
7. | தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற் பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி |
8. | மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப் பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே |
9. | ஒல்காப் பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும் தொல்காப் பியமொழிந்த தொன்மொழியும் - மல்காச்சொற் |
No comments:
Post a Comment