புயல் பெயர் காரணம்
வர்தா புயல் என்று பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா?
- தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள வர்தா புயல் இந்தியாவில் தென் ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் நாளை மதியம் கரையை கடக்க உள்ளது.
- வர்தா புயலானது தற்போது சென்னையில் இருந்து 260 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னையை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த புயலுக்கு வர்தா என்ற பெயரினை பாகிஸ்தான் வைத்துள்ளது, வர்தா என்றால் சிகப்பு ரோஜா என்று அர்த்தம்.
- இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் பெயரினை தீர்மானம் செய்கின்றன.
- கடைசியாக சென்னையை தாக்கிய நாடா புயலுக்கு ஓமன் நாடு தான் பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது, நாடா என்றால் ஒன்றும் இல்லை என்பது பொருள்.
No comments:
Post a Comment